விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு வாரச்சந்தை அனைத்து காய்கறி வியாபாரிகள், நேற்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கூட்டேரிப்பட்டு வாரச்சந்தையில் சுமார் 150 காய்கறிகடை மற்றும் மளிகைகடை, கருவாடு வியாபாரக்கடைகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறோம். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக அரசால் அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை உள்ள சூழலில் அனைத்து வியாபாரிகளும் தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதென்று அறிவித்துள்ளோம்.