கஞ்சா விற்ற பெண்கள் கைது

கம்பம்: கம்பம் நாக கன்னியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ விஜய் ஆனந்த் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்ற கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்த விமலா (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த மஞ்சுளா(47) என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தபோது போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது….

The post கஞ்சா விற்ற பெண்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: