பழநி: கொரோனா இல்லாத பகுதியை உருவாக்குவதற்காக பழநி அருகே கோபாலபுரம் கிராமத்தை தத்தெடுத்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலை தமிழகத்தில் வேகமெடுத்துள்ளது. இதனால் சமூக விலகல், முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ கோபாலபுரம் பகுதியை கொரோனா இல்லா ஏரியாவை உருவாக்குவோம் எனும் பெயரில் தத்தெடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பழநி டிஎஸ்பி சிவா தலைமை வகிக்க, ஊராட்சி தலைவர் சுஜாதா வேணுகோபால், பழநியாண்டவர் மகளிர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.