குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. இது குமரியின் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் இங்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் வந்து ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் குமரியில் கடந்த சில வாரங்களாக கொழுத்திய வெயில் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. திற்பரப்பில் அருவியாக விழும் கோதையாறும் வறண்டு அருவியில் மிக குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.