மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவர் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர் தாக்கப்பட்டது பற்றி பதிலளிக்க மதுரை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 வாரத்தில் விரிவான அறிக்க அளிக்குமாறு காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.