காஷ்மீர்: சோபியான் நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளில் இருவேறு சம்பவங்களில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு - காஷ்மீரின் சோபியான் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்றிரவு குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றுவளைத்து தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக அதேபகுதில் நேற்று மாலை மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டதால், மொத்தமாக 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு - காவல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சரணடைய வலியுறுத்தினோம்.