திருவில்லிபுத்தூர்: கொளுத்தும் வெயிலால், திருவில்லிபுத்தூர் பகுதியில் தர்பூசணி விற்பனை களைகட்டுகிறது. இதனால், மதுரையில் இருந்து சரக்கு வேன்களில் லோடு, லோடாக தர்பூசணிகள் வந்து இறங்குகின்றன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திரத்தை போல வெயிலின் புழுக்கம் அதிகமாக உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.