கர்நாடகா: ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறவிருந்தது. இதற்காக கட்டுமான பகுதியின் அருகிலேயே பந்தல் அமைக்கும் பணியானது நடைபெற்றிருந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பந்தல் அமைக்க பள்ளம் தோண்டியபோது, பந்தல் அருகே சுற்றுச்சுவரை ஒட்டியவாறு மின்கம்பம் இருந்துள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாத தொழிலாளர்கள் இரும்பு பைப்பினை உபயோகித்துள்ளனர். இதன் காரணமாக இரும்பு பைப் மின்கம்பத்தின் மீது மோதி திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.