பெங்களூரு: பெங்களூரு விஜயநகர்அருகே தம்பதிகள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர் பெண் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து விஜயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் நெலமங்கலா டவுன் ஜெயநகர் பகுதியை சேர்ந்த மொகமத்சோபியான் (20) என்று தெரிய வந்தது. இவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.