கமுதி அருகே மதுபாட்டில் பதுக்கிய 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை..!

கமுதி: கமுதி அருகே மதுபாட்டில் பதுக்கிய 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், மோகன், முருகன் ஆகியோர் தலைமையில் பெருநாழி, கமுதி, கோவிலாங்குளம், அபிராமம், மண்டலமாணிக்கம் போலீஸ் சரகம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

Related Stories: