* ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே அரங்கில் நடைபெறும் போட்டிகள் ஏப்.10ம் தேதி முதல் தொடங்குகிறது. அங்கு மொத்தம் 10 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரங்கத்தின் பராமரிப்பு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவரை தனிமைப்படுத்தினர். அவரை மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய எல்லா ஊழியர்களையும் சோதனை செய்து தனிமைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 2 பராமரிப்பு ஊழியர்கள், ஒரு பிளம்பர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* நடப்பு சாம்பியன் மும்பை அணி நாளை மறுதினம் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் களம் இறங்குகிறது. அதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகர் கிரண் மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ‘மோரேவுக்கு அறிகுறிகள் ஏதுமில்லாத கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மும்பை அணியின் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மோரே மட்டுமின்றி, மும்பை அணியின் வீரர்கள், ஊழியர்கள் என எல்லோரும் பிசிசிஐ வகுத்துள்ள சுகாதார பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்கின்றனர்’ என்று எம்ஐ நிர்வாகம் கூறியள்ளது.