மும்பை: பத்மஸ்ரீ விருது பெற்ற பாலிவுட்டின் வில்லி நடிகையும், மூத்த நடிகையுமான சசிகலா மும்பையில் காலமானார். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த பாலிவுட் மூத்த நடிகை சசிகலா (88) கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென காலமானார். இவரது மரணத்திற்கு பாலிவுட் நடிகர், நடிகையர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சசிகலா, கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து பிரபலமானவர். ஓம்பிரகாஷ் சாய்கல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.