மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார். முழு முடக்கம் நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்படும். அலுவலக ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய வேண்டும். தற்போதையை கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: