பாபநாசம்: தஞ்சை அருகே ஒருவரது வீட்டில் மூட்டைகளில் பணம் பதுக்கியிருப்பதாக வந்த தகவலால் பறக்கும் படையினர் அந்த வீட்டில் சோதனையிட்டபோது மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் தான் கிடைத்தது. தஞ்சை அருகே பாபநாசம் அரசு பள்ளி அருகே ஒருவரது வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கிடப்பதாக மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனை நடத்த வந்த தகவல் அடிப்படையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் துணை தாசில்தார் ஹெலன் ஜாய்ஸ் தலைமையில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் சுகுமார் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனையிட்டனர்.