திருமலை: ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு முதல் சுப்ரபாதம், அர்ச்னை, தோல்மாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட் வழங்கி பக்தர்களை அனுமதிக்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், பங்கேற்கும் பக்தர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.