ஐசியு.விலிருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாற்றம்

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த 26ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால், உடனடியாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்சில் கடந்த மாதம் 30ம் தேதி ஜனாதிபதிக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பின், தான் குணமடைந்து வருவதாக கூறிய ஜனாதிபதி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: