புதுடெல்லி: இந்திய மகளிர் கால்பந்து அணி கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.உஸ்பெகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் இந்திய மகளிர் கால்பந்து அணி, அங்கு 2 நட்பு ரீதியிலான சர்வதேச போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் அணியுடன் நாளையும், ஏப். 8ம் தேதி பெலாரஸ் அணியுடனும் இந்தியா மோதுகிறது. இந்த 2 போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிவது குறிப்பிடத்தக்கது.