தின்ஹட்டா:மேற்கு வங்கத்தில் உள்ள உலுபெரியாவில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘நந்திகிராமில் மம்தா பானர்ஜி தோல்வி அடைவது உறுதியாகி விட்டது. இதனால், கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதி ஒன்றில் அவர் போட்டியிடப் போவதாக வதந்திகள் பரவுகிறது. இது உண்மை தானா தீதி (மம்தா)?’ என்று கேட்டிருந்தார். மேலும், ‘மம்தா எங்கு போட்டியிட்டாலும் அவரை வீட்டுக்கு அனுப்ப மேற்கு வங்க மக்கள் தயாராகி விட்டனர்’ என்றும் விமர்சித்தார். கூச்பிகார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மம்தா, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.