புதுடெல்லி: ‘கிழக்கு லடாக்கில் எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்படும்,’ என வௌியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:இந்தியா- சீனா இடையே ராணுவம், தூதரக ரீதியிலான உறவுகள் தொடர்ந்து வருகிறது. எனவே, கிழக்கு லடாக்கில் எஞ்சியுள்ள இடங்களில் இருந்தும் இருநாட்டு படைகளை விரைவாக வாபஸ் பெறுவதில் இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்படும் என நம்புகிறோம்.