கோலார்: பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் சாதனைப்படைத்து வருகின்றனர் என்று நீதிபதி ஏ.சி. தயானந்தமூர்த்தி தெரிவித்தார். கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி தயானந்தமூர்த்தி பேசியதாவது, ``தற்போது பெண்கள் அனைத்து துறையிலும் சாதனைப்படைத்து வருகின்றனர். உதாரணத்துக்கு டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானி, அரசியல் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளது. அதே போல் நமது நாட்டில் பெண்களுக்கு தனி மரியாதை உள்ளது. அவர்களை தாயாகவும், தெய்வமாகவும் பார்கின்றனர். அதே போல் நீதிபதி பார்வதி தற்போது தந்தை, தாய், ஆசிரியர்கள், கன்னடா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.