பெங்களூரு: பசவகல்யாண் தொகுதி இடைத்தேர்தலில் மஜத யாருடனும் உள்ஒப்பந்தம் செய்து ெகாள்ள வில்லை என்று முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது: ``பசவகல்யாண் தொகுதி இடைத்தேர்தலில் மஜத சார்பாக இஸ்லாமிய வேட்பாளர் நிறுத்தியுள்ளதற்கு பா.ஜ.விடம் ரூ.10 கோடி பணம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.. ஜமீர் அகமதுகான் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் 2005-ம் ஆண்டு நடந்து முடிந்த சாம்ராஜ்பேட்டை தொகுதி இடைத்தேர்தலின் போது மஜத சார்பாக அவரை நிறுத்தி வெற்றிபெற செய்த போது தேர்தல் செலவுக்காக பா.ஜ.விடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். கட்சியில் இருக்கும் வரை தங்களை வளர்த்துக்கொண்டு வெளியே சென்ற பின்னர் கட்சி குறித்து தவறாக பேசி வருவது வழக்கமான ஒன்று.