பெங்களூரு: நாட்டிலேயே அதிகபடியாக கர்நாடகாவில் 7,346 மெகாவாட் மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய சூரிய மின்உற்பத்தி துமகூருவில் உள்ள பாவகடாவில் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், கர்நாடகா சூரிய கதிர்மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவுக்குப் பிறகு, தமிழகத்தில், 4,403 மெகாவாட் மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் பெறப்படுகிறது. தொடர்ந்து குஜராத்தில் 4,068 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்நாடக பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தரவுகளின்படி, கலபுர்கியின் பிரோசாபாத்தில் ஒரு சூரிய பூங்கா அமைப்பதன் மூலம் இதை மேலும் விரிவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த பூங்கா 500 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும்.