சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று மாலை 180வது வட்டம் பிள்ளையார் கோயில் தெரு, பாரதி தெரு, வாஞ்சிநாதன் தெரு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அசன் மவுலானாவுக்கு ஆதரவாக திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, 180வது வட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பொதுமக்கள் மத்தியில் அசன் மவுலானா பேசுகையில்,‘‘ வேளச்சேரி தொகுதியின் முக்கிய பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். இந்த தொகுதியை ஒரு ‘மாடல் தொகுதியாக’ மாற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதை நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.