சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அள்ளூர் கிராமத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், புதிய பாலத்தையொட்டி செல்லும் சாலையில், வடகிழக்கு பருவ மழையின்போது ஜல்லிகளும், செம்மண்ணும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது.