மதுரை: மதுரையில் ஆசிட் ஊற்றி விரட்டியடிக்கப்பட்ட 2 காளை, ஒரு பசு மாடு உடலில் பலத்த காயத்துடன் ஒரு மாதமாக பரிதவித்து சிகிச்சைக்காக ஏங்கி தவித்து வருகின்றன. மதுரை சூர்யா நகர் பகுதியில் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இந்த மாடுகளில் 2 காளை மாடு, ஒரு பசு மாடு மீது கடந்த ஒரு மாதம் முன்னதாக சிலர் ஆசிட் உள்ளிட்ட ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி விரட்டியடித்துள்ளனர். இதில் அந்த மாடுகளின் வயிற்று பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது, தற்போது 3 மாடுகளுடன் அந்த காயத்துடன் பரிதவித்து வருகின்றன.