பாஜ எம்எல்ஏ மீது கடும் தாக்கு

சண்டிகர்: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப்பின் அபோஹர் தொகுதி பாஜ எம்எல்ஏ அருண் நரங் மலோட் பகுதிக்கு நேற்று சென்றார். அவரை விவசாயிகள் என கூறிக் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. தகராறில் ஈடுபட்ட அவர்கள், எம்எல்ஏவின் ஆடைகளை கிழித்து எறிந்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து எம்எல்ஏவை பத்திரமாக இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.  இந்த சம்பவத்திற்கு மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: