தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி மாடம்பாக்கம் பகுதியில் உள்ள நரிக்குறவர்களை நேற்று காலை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர்கள், ‘கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராடியும் எங்களுக்கு ரேஷன் அட்டைகள் கிடைக்கவில்லை. அதேபோல எங்களுக்கு வீடு வசதியும் செய்து தரப்படவில்லை. எனவே, எங்களுக்கு ரேஷன் அட்டை மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்’ என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ‘வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.