கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பகுதயில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு தொழிற்சாலைகள், கடைகள், குடிசை தொழில் செய்யும் நிறுவனங்கள் பெருமளவில் செயல்பட்டு வருகிறது. போச்சம்பள்ளி -செல்லம்பட்டி சாலையில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், மளிகை கடைகள், நொறுக்கு தின்பண்ட கடைகளிலும் குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.