சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திரு. விக்கி, திரு. கிரி, திரு.வின்சன்ட், திரு. ஜம்புலிங்கம், திரு. பிரின்ஸ், திரு. சுரேந்தர், திரு. விகல், திரு. தினேஷ் குமார் ஆகியோர் அடங்கிய ரயில்வே பாதுகாப்பு படை தேர்தல் சிறப்பு கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் (24.03.2021) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவையிலிருந்து மதியம் 01:55 மணிக்கு சென்னைக்கு வந்த இன்டர்சிட்டி விரைவு ரயில் வந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சோதனை செய்ததில் அவரது பையில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.