அரூர்: தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு நன்செய், புன்செய் பயிராக பயிரிடப்படுகிறது. மரவள்ளி கிழங்கிலிருந்து மாவை எடுக்க ஆத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த மாவிலிருந்து சேமியா, ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. பின்னர் கிடைக்கும் கழிவு காகித ஆலைகளில் பேப்பர் தாயரிப்பிலும், ஜவுளி துறையில் துணிகளுக்கு மொடமொடப்பை கொடுக்கவும், பசை தயாரிப்பிலும், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
