திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வாதனுக்கும் மோதல் தீர்ந்தபாடில்லை. சமீபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருக்கும் போதே, திண்டுக்கல் சீனிவாசன் பாதியில் எழுந்து சென்றது இருவருக்குமிடையேயான மோதலை பட்டவர்த்தனமாகக் காட்டியது. வரும் தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசனை தோற்கடித்தால், கட்சியில் அவர் டம்மியாகி விடுவார். நமது கை ஓங்கி விடுமென நத்தம் விஸ்வநாதன் தரப்பு கணக்கு போட்டுள்ளதாம். பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு, உளறல் பேச்சால் சர்ச்சை என ஏற்கனவே திண்டுக்கல் சீனிவாசன் கடும் அப்செட்டில் உள்ளார். இந்த சூழலில் ‘நத்தம்’ தரப்பு ஒரு மெகா பிளானை களமிறக்கி உள்ளார்களாம்.ஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அறிவிப்புக்கு, வெள்ளாளர் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசாணைக்கு பரிந்துரை செய்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அக்கட்சி வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.