செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர் சங்க புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான 2024 – 2025க்கான செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செயலாளர் பொருளாளர் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு நீதிமன்றவளாகத்தில் அமைந்துள்ள பார் அசோசியேஷனில் விழா நடைபெற்றது. இந்தப் பதவியேற்பு விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தீஸ்வரன் செயலாளர் குமரேசன் பொருளாளர் மதியழகன் இணைச் செயலாளர் செல்வகுமார் துணைத்தலைவர் இளங்கோவன் பெண்கள் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் ஜோஸ்பின் விஜி அனைவரும்பதவி ஏற்று கொண்டனர்.

இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: