விழுப்புரம்: விழுப்புரத்தில் அமமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நமக்கும், ஆளும் கட்சி பழனிச்சாமி கம்பெனிக்கும் இடையே நடக்கும் தேர்தல். பழனிச்சாமி கம்பெனி. காந்திநோட்டை நம்பியே நிற்கிறது. இந்த தொகுதியில் ஒருத்தர் தள்ளாடிக்கொண்டே வருவார். அவருக்கு ஏற்கனவே உடம்புவேற சரியில்லை. கோபம் உடம்புக்கு ஆகாது தம்பி. என்ன பேச்சு, என்னகோபம்?. நார்மலா கோபப்பட்டால் பரவாயில்லை. தள்ளாடிக்கொண்டே கோபப்படுவது என்ன நியாயம். அமைச்சராக இருந்து கொண்டு இப்படி கோபப்படுவதும், பேசுவதும் அசிங்கமாக இருக்கு. காந்திநோட்டை நம்பிதான் இந்ததேர்தலில் நிற்கிறார்கள்.