திருவனந்தபுரம்: கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே அரசு வேலை கிடைப்பதால் இளைஞர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று கொச்சியில் ராகுல்காந்தி பேசினார். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ராகுல்காந்தி நேற்று விமானம் மூலம் கொச்சி வந்தார். கொச்சியில் உள்ள தூய தெரசா கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் ெகாச்சி வைப்பின் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது, கேரளாவில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான குத்தகையை கேரள அரசு ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியது.