இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நாட்டில் நேற்று முன்தினம் தான் நாடு தழுவிய அளவிலான கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார். அப்போது, அவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால், அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.