மரக்காணம்: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இது போல் சாலை விபத்தில் சேதம் அடையும் வாகனங்களை வழக்குபதிவு செய்து இங்குள்ள காவல் நிலைய வளாகத்தில் நிறுத்துகின்றனர். மேலும் புதுவையில் இருந்து தினமும் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு பிராந்தி, கள்ளச்சாராயம் போன்ற மது பானங்கள் கடத்தப்படுகிறது. இது போல் கடத்தப்படும் வாகனங்களை சோதனைச்சாவடிகளில் போலீசார் மடக்கி பிடித்து அவைகளையும் பறிமுதல் செய்து, மரக்காணத்தில் இருக்கும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மையத்திற்கு எடுத்து வருகின்றனர். இந்த வாகனங்களும் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீட்க வேண்டும் என்றால் அதன் உரிமையாளர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலை உள்ளது.