புதுடெல்லி: துவார்க்காவில் 76 வயது தாயை நடுத்தெருவில் மகன் அடித்துக்கொன்ற காட்சி வீடியோவில் வைரலாகி வருகிறது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி துவார்க்காவில் பிந்தாபூர் போலீஸ்நிலைய பகுதியில் வசித்து வந்தவர் அவதார் கவுர்(76). இவரது மகன் ரன்பீர்(45). வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வீட்டு பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக அவதார் கவுருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொ டர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பேசி முடித்து வைத்தனர். அவர்கள் சென்றபிறகு தாய் அவதார் கவுருக்கும், மகன் ரன்பீர் மற்றும் மனைவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.