மைசூரு: பெண்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது சரியில்லை பெண்களாக பிறந்து வாழ்வதே சவாலாகியுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரோகிணிசிந்தூரி தெரிவித்தார். மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் ரோகிணிசிந்தூரி பேசியதாவது: கடந்த காலங்களில் பெண்கள் சமையல், வீடு, குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தனர். ஆனால் தற்போது அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் உதவி முக்கியமாகவுள்ளது. இதற்கு முன் பெண்களுக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்யப்பட்டது.