புதுடெல்லி: அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடுகள் வரிசயைில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலியும் இணைந்துள்ளன. இதனால், இந்தியாவில் இதன் கோவிஷீல்டு தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் சுமார் 3 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சில வெளிநாடுகளில் அஸ்ட்ரஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளில் அஸ்ட்ரஜெனகா மருந்தை தற்காலிகமாக தடை செய்தன. நேற்று முன் தினம் அயர்லாந்து அரசும் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்தது.