திருவனந்தபுரம் :பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைத்தார். மாத பூஜையை முன்னிட்டு வரும் 18-ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் மாத பூஜையின் தொடர்ச்சியாக 19-ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு விழா தொடங்க உள்ளது. எனவே அன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரு ராஜீவரு விழாவை கொடி ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார்.