மாண்டலே: மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியை கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று ராணுவம் கைப்பற்றியது. தலைவர்கள் பலர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கையை ஏற்காத மக்கள், தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சனிக்கிழமையன்று மாண்டலேவில் நடந்த போராட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் மியான்மரின் தெற்கு நகரான பியாய் நகரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதேபோல் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் யாங்கூனில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று சமூக வலைதளங்களில் பலர் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.