சீர்காழி : சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டத்தின்கீழ் 2013- 2014ம் ஆண்டு ரூ.16 லட்சம் செலவில் கழிவறை கட்டப்பட்டது. இதை பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.