போச்சம்பள்ளி: குள்ளம்பட்டி ஊராட்சியில் ரூ14.50 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மையத்தை திறக்காததால், சமூக விரோதிகள் இரவில் கூடி, மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். பர்கூர் ஊராட்சி ஒன்றியம் குள்ளம்பட்டி ஊராட்சி சந்தம்பட்டியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ14.50 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால் 5 ஆணடுகள் முடிந்த நிலையில், இன்று வரை சேவை மையம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.