கோலார்: மாவட்ட கூட்டுறவு வங்கி வளர்ச்சிக்கு பெண்களே காரணம் என்று மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கூட்டுறவு வங்கி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ``கிராம, தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. அதே போல் சட்டப்பேரவை, மக்களவையில் 33 சதவிகிதம் வழங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சில பெண்கள் இடஒதுக்கீட்டு அவசியத்தை சரியாக பயன்படுத்தி சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சிறந்த நிர்வாகம் நடத்திய உதாரணங்கள் உள்ளனர். அரசியல் அமைப்பின் படி பெண்களுக்கு அனைத்து துறையிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்கள் உள்ளனர்.