பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் திருத்தாலா அருகே கப்பூரில் விவசாயினர் அமைப்பு சார்பில் தண்ணீரில் ரேக்ளா போட்டி நேற்று நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். பாலக்காடு மாவட்டத்தில் விவசாயிகளின் பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான தண்ணீரில் காளை மாடுகளின் ரேக்ளா போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 96 காளைகள் பங்கேற்றன.