மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு...! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,599 பேர் பாதிப்பு: 97 பேர் உயிரிழப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தாக்கம்  மீண்டும் அதிகரித்து ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,12,29,398-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,57,853-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24  மணி நேரத்தில் 14,278 கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,08,82,798-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவர்களின் நாடு முழுவதும் தற்போது 1,88,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 2 கொடியே 9 லட்சத்து 89,010 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: