ஆவடி: ஆவடி, சி.டி.எச் சாலையில் பேத்தியுடன் மொபட்டில் சென்ற மூதாட்டி, ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியபோது, தவறி விழுந்து இறந்தார்.
ஆவடி, கன்னிகாபுரம், நாகவல்லி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (70). இவரது பேத்தி மதுமிதா. நேற்று மதியம் ஆண்டாள், பேத்தி மதுமிதாவுடன் பூ வாங்குவதற்காக ஆவடிக்கு மொபட்டில் புறப்பட்டார். சிடிஎச் சாலை, சிறப்பு காவல் படை 2ம் அணி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் மொபட் ஏறி இறங்கியபோது, நிலைதடுமாறி ஆண்டாள் கீழே விழுந்து, படுகாயமடைந்தார்.