திருப்புவனம்: கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில், சுடுமண் மூடி குமிழ் கண்டறியப்பட்டது. இது 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கணேசன் என்பவரது நிலத்தில் கடந்த பிப்.13ம் தேதி துவங்கியது. கீழடி அகழாய்வில் ஆறு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதலில் ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டது. இதுவரை இரண்டு மீட்டர் ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மணிகள், பாசிகள், பானை ஒடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.