அலிகர்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள், இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி மீட்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று வயலில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.