காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சேகர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். சமூக செயற்பாட்டாளர் டிஎஸ்எஸ். மணி சிறப்புரையாற்றினார். இந்தப் போராட்டத்தில் மருத்துவர், வண்ணார் உள்ளிட்ட குறுஞ்சமூகங்களுக்கு எம்பிசி பட்டியலில் 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.